சுருக்கமான சிலுவைப்பாதை ! தமிழ் மொழியில் !
சுருக்கமான சிலுவைப்பாதை ! முதல் நிலை இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள். பாடல்: பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர் பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர். இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள் செபம்: எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோ அறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும், வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள் பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்! ஒரு பரலோக மந்திரம், அருள் நிறைந்த மந்திரம், திருத்துவ ஜெபம் சொல்வோம். எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென். ____ இரண்டாம் நிலை இயேசு நாதரின் தோள்மேல் சில...
Comments
Post a Comment