வியாகுல மாதா ஜெபமாலை
வியாகுல மாதா ஜெபமாலை
(மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)
ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில் முன்பு நின்று:
சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவராகிய இயேசுவே! உமது பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம்முடைய தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நல்லவரான ஆண்டவரே, உம் மிகப்புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச்சித்தத்தை நிறைவேற்றவும் மோட்சத்தில் நித்தியத்திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ஆமென்.
பரிசுத்த கன்னி மரியாள் தமது திருக் குமாரனின் பாடுகள் நிமித்தமாக அநுபவித்த ஏழு வியாகுலங்களைத் தியானிப்போம்.
முதலாம் வியாகுலம்
இந்த முதல் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாளுக்குச் சிமியோன் சொன்ன தீர்க்கதரிசனத்தால் தமது திருக்குமாரனுடைய மரணத்தையும் மனுஷருடைய சேதத்தையும் அறிந்து, அவர்கள் தமது இருதயத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
பெரிய மணியில்:
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
இயேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
இரண்டாம் வியாகுலம்
இந்த இரண்டாம் இரகசியத்தில் அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனை ஏரோது என்பவன் கொல்லத் தேடுகிறதை அறிந்து, அவரை எடுத்துக் கொண்டு எகிப்து தேசத்துக்கு ஓடிப்போய் ஏழு வருமளவும் மகாதுக்கம் அநுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
பெரிய மணியில்:
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
இயேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
மூன்றாம் வியாகுலம்
இந்த மூன்றாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனோடு தேவாலயத்திற்குப் போனவிடத்தில் மூன்றுநாள் தேடியும் காணாமல் போனபடியினாலே தமது ஆத்துமத்தில் மிகுந்த வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
பெரிய மணியில்:
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
இயேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
நான்காம் வியாகுலம்
இந்த நான்காம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் கபால மலையில் மரணமடைய சிலுவை சுமந்து போகையில், அவரை எதிர்கொண்டு மினவினபோது வாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
பெரிய மணியில்:
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
இயேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
ஐந்தாம் வியாகுலம்
இந்த ஐந்தாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரன் சிலுவையில் அறையுண்டு அவர் சகலராலும் கைவிடப்பட்டு ஓர் ஆறுதலுமில்லாமல் மரணமடைகிறதைக் கண்டு துக்க சாகரத்தில் அமிழ்ந்தி மனோவாக்குக் கெட்டாத வியாகுலப்பட்டார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
பெரிய மணியில்:
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
இயேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
ஆறாம் வியாகுலம்
இந்த ஆறாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய திருச் சரீரத்தைச் சிலுவையினின்று இறக்கி தமது மடிமேல் வளர்த்தி அதிலுள்ள காயங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் சொல்லக் கூடாத வியாகுலம் அநுபவித்தார்களென்று தியானிப் போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
பெரிய மணியில்:
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
இயேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
ஏழாம் வியாகுலம்
இந்த ஏழாம் இரகசியத்திலே அர்ச். கன்னி மரியம்மாள் தமது திருக்குமாரனுடைய சரீரத்தைக் கல்லறையில் அடக்கம் பண்ணின பின்பு அவரது மரணத்தையும் திருப்பாடுகளையும் தமது தனிமையையும் நினைத்து மட்டில்லாத துயரம் அனுபவித்தார்களென்று தியானிப்போமாக. 1 பர. 7 அருள். 1 திரி.
பெரிய மணியில்:
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (1)
சிறிய மணிகளில்:
இயேசுவே உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (7)
ஓ இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது திருத்தாயாரின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.
(3 முறை சொல்லவும்).
முடிவு ஜெபம்.
ஓ மரியாயே, சிநேகத்தினுடையவும் துயரங்களுடையவும், இரக்கத்தினுடையவும் தாயே, உம்முடைய ஜெபங்களை எங்களுடைய ஜெபங்களுடன் சேர்த்து, எங்களுடைய வேண்டுதல்களை உமது தாய்மையுள்ள இரத்தக்கண்ணீரின் பெயரால் ஏற்றுக்கொண்டு, நாங்கள் இயேசுவையே எப்போதும் நோக்கியிருக்கவும், நாங்கள் கேட்கும் வரப்பிரசாதங்களுடன் இறுதியாக நித்திய ஜீவியக் கொடையையும் தந்தருளும்படி உம்மிடம் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
உமது இரத்தக் கண்ணீரால், துயரம் மிகுந்த தாயே, சாத்தானுடைய ஆட்சியை அழித்தருளும். தெய்வீக சிநேகத்தால் கட்டுண்டவராகிய இயேசுவே, உலகத்தை பயமுறுத்தும் தப்பறைகளிலிருந்து அதனைக் காத்தருளும்.
ஆமென்.
Comments
Post a Comment